தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
வாஷிங்டன்:-
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக கஞ்சா வழங்கும் புதிய திட்டத்தை வாஷிங்டன் மாகாணம் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுவர்களுக்கு இலவசமாக பர்கர், பீட்சா வழங்கும் அறிவிப்புகளும் முன்னரே வெளியாகி இருந்தது. இந்நிலையில் வாஷிங்டன் மாகாண அரசு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு இலவசமாக கஞ்சா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் பல மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்துவதற்கு சட்டரீதியாக அனுமதி உள்ளது. இதற்கென பிரத்தியேகமாக கடைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.