காபூல் :
ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் படுகாயமடைந்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது
தலிபான் அரசு அமைக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற 2 புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பத்திரிகையாளர்களை அரை நிர்வாணப்படுத்தி உள்ளாடையுடன் நிற்க வைத்து பின்புறத்தில் கடுமையாக தாக்கி உள்ளார்கள்.
லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் மார்க்ஸ் டாம் இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஏதிலார்ட் ரோஸ் சேதி நிறுவனத்திச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மேற்கு காபூல் கார்ட் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து வீடியோ எடிட்டர் மற்றும் செய்தியாளர் இருவரும் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது தலிபான்கள் அவர்களை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து தாக்கி உள்ளனர் என்பது தெரியவருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல் என்று அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.