இன்று உ லக சிங்கங்கள் தினம்
சிங்கங்கள் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் சுதந்திரமாக சுற்றி திரிந்தன. கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 80 சதவிகித விலங்குகள் மறைந்துவிட்டன.
சிங்கங்கள் தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாட்டிலும் வாழ்ந்து வருகின்றன. மேலும் சமீபத்திய கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 20,000 சிங்கங்கள் என குறைந்துள்ளது..
இச்சூழலில் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் வாழ்வாதாரம் குறித்து குறைந்து வரும் விழிப்புணர்வு மற்றும் சிங்கங்களின் குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்கான ஆதரவை சேகரிக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சிங்கங்கள் அவற்றின் வாழ்விடத்தில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வதன் மூலமும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவி புரிகின்றன. சிங்கங்கள் இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வாழ்விடங்களை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது என்பதோடு பல்லுயிர் மேலாண்மைக்கு உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் சிங்க ராஜாவை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.