புருசல்ஸ்:
கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளனர். பல நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
மிகவும் பின்தங்கிய நாடுகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்பை அடைந்துள்ளனர். கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை உலக நாடுகளில் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. உலக சுகாதார அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது.
பல நாடுகள் மேற்கொண்ட ஆய்வின் பலனாக தற்போது மால்நியூபைராவர் என்கிற புதிய வாய்வழி மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கிடைக்காத ஏழை குடிமக்கள் பயன்பெறுவர் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.
மால்நியூபைராவர் மாத்திரை மிதமான கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை குணப்படுத்தும். ஆனால் வைரஸ் தாக்கத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 ம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.