பொதுவாக பால் என்பது ஒவ்வொருவரது அன்றாட வாழ்விலும் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவுப்பொருளாகும்.இதில் உடலுக்கு தேவையான கால்சியம்,புரோட்டீன்,கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
பாலின் மூலம் தயிர்,நெய்,வெண்ணெய்,பாலாடை போன்ற ஊட்டச்சத்து பொருட்களும் நமக்கு கிடைக்கிறது.இத்தகைய பல்வேறு நன்மைகள் நிறைந்த பாலை பொதுவாக நாம் மாடுகளை கொண்டு தான் பெறுகிறோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இங்கு இரண்டு விஞ்ஞானிகள் மாடுகளின்றி சுத்தமான பாலை உருவாக்கியுள்ளனர்.அது எப்புடி மாடு இல்லாம பால்?????இதானே உங்க கேள்வி….அது தான் நம்ம “ஆவிவ் மற்றும் ஓரி” பாலில் செய்த புரட்சி.இயற்கையாக மாடுகளி இடமிருந்து பெறப்படும் பாலில் அதிக அளவு லாக்டோஸ் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கும். அதுமட்டுமல்லாது மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் மருந்துகள் வாங்கும் நிலை ஏற்படும். மாடுகளின் பராமரிப்பிற்கென குறிப்பிட்ட அளவு இடமும் தேவைப்படும்,இதனால் பண விரயமும் ஏற்படும். ஆனால் இவர்கள் தயாரித்திருக்கும் பாலில் இதுபோன்ற லாக்டோஸ் மற்றும் கொழுப்புச்சத்து இல்லை. மேலும் அதுபோன்ற செலவுகளும் ஏற்படாது.
மாடுகளிலிருந்து பெறப்படும் ஜீன்களை கொண்டு இத்தகைய தரமான பாலை ஆவிவ் மற்றும் ஓரி ஆகிய இந்த 2 வல்லுநர்கள் தயாரித்துள்ளனர். இயற்கையாக மாடுகளிலிருந்து பெறப்படும் பாலின் சுவையும், தயாரிக்கப்பட்ட இந்த பாலின் சுவையும் ஒரே மாதிரியாக உள்ளது. மேலும் இத்தகைய செயல்பாட்டில் மாடுகள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தப் பால் எவ்வித தீங்குகளையும் விளைவிக்காது.இதிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய் போன்ற பால் சம்பந்தபட்ட பொருட்கள் அனைத்தையும் பெற இயலும்.இது முழுக்க முழுக்க சத்து மற்றும் சுகாதாரம் நிறைந்த பாலாகும்,கூடிய விரைவில் இத்தகைய பால் சந்தைப்படுத்த இருக்கிறது.