வாஷிங்டன்:-
கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் பலர் தங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பொம்மை (Sex Toys) பயன்படுத்தியதால் தனக்கு எதிர்பாராமல் நடந்த சம்பவம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வருபவர் சமந்தா பலென்ஸ்க் (Samantha Palenske) (21). இவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் தனது வாழ்வில் நிகழ்ந்த அதிசயமான சம்பவம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள இவர் முதலில் இந்த விஷயத்தை எனது நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தான் கூற நினைத்தேன், ஆனால் ஊரடங்கு காலத்தில் இந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை மற்றவர்கள் அனுபவிக்க நேர்ந்தால் மருத்துவரின் உதவியை பெற வைப்பதற்கு ஊக்கமாக அமையும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஒரு சிலருக்கு சிரிப்பு சிலருக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இவர் ஒரு டாலர் கொடுத்து பாலியல் பொம்மை ஒன்றை (Butt Plug) வாங்கியுள்ளார். இவர் இதை வீட்டில் யாரும் இல்லாதபோது பயன்படுத்துவாராம். மற்றபடி அதனை மற்றவர் இருக்கும் பொழுது பயன்படுத்த மாட்டாராம்.
இவ்வாறு இருக்கும்போது Tinder செயலி மூலம் அறிமுகமான Beardy என்ற நபருடன் டேட் செய்துள்ளார். அப்பொழுது Butt Plug-ஐ பயன்படுத்தியுள்ளார். அப்போது இவர் ஏதோ தவறாக நிகழ்ந்துள்ளது என்று உணர்ந்துள்ளார். உடனடியாக இது குறித்து கூகுளில் தேடி உள்ளார். இதையடுத்து அந்த டேட்டிங் நண்பர் அவரை மருத்துவமனை ஒன்றில் இறக்கி விட்டு விட்டு அவர் கிளம்பி விட்டார்.
அங்கிருந்த 5 மருத்துவ நிபுணர்கள் இதுகுறித்து ஆலோசித்து உள்ளனர் பின்னர் எக்ஸ்ரே எடுத்துள்ளனர் அப்பொழுது அந்த பாலியல் பொம்மை இவரது அடிவயிற்றுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் மூன்று மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு அந்த பாலியல் பொம்மை அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் பல் மருத்துவமனையில் (Denture Clinic) பல்லை பிடுங்கி எடுத்தது போல் இருந்தது என்று கூறினார்.
இவருக்கு தற்போது ஷாவ்ன் க்யூபி (Shaun Cubie (29)) என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையை மக்கள் தர்மசங்கடமாக கருதக்கூடாது. இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர்கள் இது குறித்து வெளியே என்னைப் போன்று பேசுவதில்லை. இதுகுறித்து வெட்கப்படத் தேவையில்லை இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் கூச்சப்படாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ உதவியைப் பெறுங்கள் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த அதி அற்புதமான, நாட்டுக்குத் தேவையான ஃபேஸ்புக் பதிவிற்கு 99,000க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. இந்தப் பதிவிற்க்கு ஷேர்களும், கமெண்டுகளும் பறந்து வருகின்றன.