லாகூர்:
‘பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பொம்மை ஆட்சியை ராணுவமும்,ISI-ம் நடத்துகின்றன” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து துவக்கியுள்ள பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் பொதுக் கூட்டத்தில் ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக நவாஸ் ஷெரீப் பேசினார்.
அதில், “ராணுவத் தளபதி ஜெனரல் ஜாவித் பஜ்வா தான் என் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார்.2018-ம் ஆண்டு தேர்தலில். தகுதியில்லாத இம்ரான் கானை பிரதமராக்கி பொம்மை ஆட்சியை ராணுவமும், ISI-ம் அமைத்தது.நாடு மிகவும் மோசமாக சீரழிந்ததற்கு ஜெனரல் பஜ்வா தான் பதில் அளிக்க வேண்டும்.என்று அவர் பேசினார்.