டெல் அவிவ்:-
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வின் (Benjamin Netanyahu) ஆலோசகர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு- க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
இதேபோல் பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய ஆலோசகர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.
ஆனாலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் டேவிட் கீஸ் (David Keyes) கூறுகையில்:-
இஸ்ரேல் மக்களுக்கு சுய தனிமைப்படுத்துதலின் அவசியம் குறித்து எடுத்துக்காட்டாக இருப்பதற்காக பிரதமர் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்றார்.
இஸ்ரேல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இதுவரை இஸ்ரேலில் 4,800க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.