,அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு கெடாத ஆப்பிள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.பழ வகைகளில் மிக உயர்ந்த ஒன்றாக கருதப்படுவது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் பற்களுக்கு நல்லது, நோயாளியைப் பார்க்க செல்லும்போது ஆப்பிள் வாங்கி செல்வது என அனைத்து இடங்களிலும் இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் சுமார் இருபது வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்கும் ஆப்பிளை கண்டுபிடித்துள்ளனர்.”காஸ்மிக் கிரிஸ்ப்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பிள், ஹனிகிறிஸ்ப், என்டர்பிரைஸ் ஆகிய வற்றின் கலப்பினம் ஆகும். இது முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. திட மற்றும் மிருதுவான அதே சமயம், அதிகளவு சாறு இந்த ஆப்பிளை வெளியிடுவதற்கு சுமார் 72 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆப்பிளை சரியான நிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறிக்கப்பட்ட நாள் முதல் கிட்டத்தட்ட 10 முதல் 12 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.