ஸ்டாக்ஹோம்:
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அந்த பரிசை உருவாக்கினார். அவரது விருப்பப்படி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும், அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும் வழங்கப்படும்.இதற்கான விழா ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி நடக்கும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசினை பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோபல் பரிசு வென்றவர்களுக்கு தனித்தனியாக அவர்களது சொந்த நாடுகளிலேயே பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி அனைவருக்கும் நோபல் பரிசு அவரது வீடுகளிலேயே வழங்கப்பட்டது.ஒஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.