1981-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவலில் கொரோனா வைரஸ் குறித்து எழுதப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனோ வைரஸ் இதுவரை 2000 பேரை பலி வாங்கியுள்ளது.
மேலும் 25 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்த வைரஸ் குறித்து உலகமே பீதியில் உள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 1981 ஆம் ஆண்டு டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்பவர் எழுதிய The Eyes of Darkness என்ற திரில்லர் நாவலில், இந்தக் வைரஸ் குறித்து முன்பே கூறப்பட்டுள்ளது.
அந்த நாவலில் Wuhan-400 என்ற உயிரி-ஆயுதத்தை (Biological Weapon) வூஹான் நகர் அருகே உள்ள RDNA ஆய்வகத்தில் Bio-war-க்காக சீன ராணுவம் தயாரிப்பதாக எழுதியிருப்பார். இதில் கூறபட்டுள்ளது போல வூஹானிலிருந்து தான் இந்த கொடூர வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் இதை கண்ட நெட்டிஸன் ஒருவர். இது குறித்து ட்விட்டரில் வெளியிட இது தற்போது வேர்ல்டு ட்ரென்டிங்கில் உள்ளது.