உயிருடன் முழுங்கிய நபரை திமிங்கலம் ஒன்று துப்பியதால் அந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
நாம் சிறு வயதில் பாட புத்தகத்தில் “குடையும் குப்புசாமியும்” என்ற கதையை படித்திருப்போம். அந்த கதையில் புயல் காற்றில் குடையுடன் அடித்து கடலுக்குள் செல்லும் குப்புசாமி நேராக திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று விடுவார்.
வாய்க்குள் சென்ற குப்புசாமி திமிங்கலத்தின் வயிற்றில் ஓங்கி உதைப்பார், திமிங்கலம் உடனே துப்பிவிடும் குப்புசாமியும் பிழைத்து விடுவார். அதே போன்ற ஒரு சம்பவம் தான் இங்கும் அமெரிக்காவின் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸை சேர்ந்தவர் மைக்கேல் பெக்கார்ட் (56). இவர் இறால்களை பிடிப்பதற்காக கடலுக்குள் நீந்தி உள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத வகையில் வந்த திமிங்கலம் ஒன்று இவரை அப்படியே உயிருடன் லபக்கென்று முழுங்கி கொண்டது. கிட்டத்தட்ட 30 நொடிகளுக்கு பிறகு மைக்கேலை திமிங்கலம் துப்பியதால் நல்வாய்ப்பாக மைக்கேல் உயிர்தப்பினார்.
திமிங்கலத்தால் உயிருடன் விழுங்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.