உலகம்

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பாகிஸ்தான் அரசு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:

உலகின் பல்வேறு பகுதிகளில் ‘டிக் டாக்’ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு.

அந்த வகையில், டிக் டாக் செயலியின் மூலம் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளி வருவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக்டாக்  செயலிக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் தடை விதித்தது.  

ALSO READ  கொரோனா வைரஸை தடுக்க ஐடியா சொன்ன தலாய்லாமா

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் புகார்களையடுத்து டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது சீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கிடையே, டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என பாகிஸ்தானுக்கு சீனா நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அரசு தற்போது  அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது உலக தலைவர்

News Editor

கொரோனா பரவல்: மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க இந்தியர் கண்டுபிடித்த புதிய வழிமுறை….

naveen santhakumar

உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்…

naveen santhakumar