கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.
உலகிலுள்ள பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனையடுத்து பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில்
கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தலைநகர் லிமாவில் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விதி மீறலில் ஈடுபட்டதற்காக அபராதம் விதித்துள்ளார்.
ஆனால், அந்த பெண் அபராதத்திற்கு பதிலாக முத்தம் தருவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் முத்தத்தை பரிமாறிக் கொள்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, அந்நகரின் மேயர் லூயிஸ் மோலினா உடனடியாக அந்த அதிகாரியை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.