பாங்காக்:-
தன் முன்னாள் காதலி வேறொரு ஆணுடன் இருப்பதைக் கண்ட புத்த துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து தன் முன்னாள் காதலியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்த் நாட்டில் புரிராம் மாகாணம் (Buriram province) வாட் பான் நோங் புவா (Wat Ban Nong Bua) பகுதியை சேர்ந்த புத்த மதத் துறவி ஃப்ர அவும் தீரென்ராம் (57) (Phra Aum Deeruenrom). இவர் புத்த துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய (33) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் தனது காதலியை விட்டு பிரிந்து விட்டார்.
இந்நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலி லம்பாய் புவலோயை வேறு ஆணுடன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துறவி தனது வேனை அவர்கள் கார் மீது மோத, லம்பாயுடன் இருந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
ஆத்திரம் அடங்காத தீரென்ராம் தன் காரிலிருந்த கத்தியை (Machete) எடுத்து லம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார். போலீசார் தீரென்ராமை அவரது உறவினர் கைது செய்தனர்.
தீரென்ராம், குறித்து கிராமத்தினர் கூறுகையில்:-
புத்த துறவியாகும் முன் லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், பலவாறு கூறப்படுகிறது. தீரென்ராம் துறவி என்பதை மறந்து அப்பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இதனால் லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்ததுள்ளார். லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில் சொன்னால் புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை வேறு ஆணுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துள்ளார் தீரென்ராம். அப்பெண்ணுடன் இருந்த நபர் அவரது கணவர் என்றும், அவர் முனிசிபாலிட்டியில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.