வாஷிங்டன்:-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப்:-
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது. இனி வரும் வாரங்களில் நாம் அனைவரும் மாற்றங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். மேலும், இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால நன்மைகளை தரும் எனக் கூறினார். அடுத்த வரும் எட்டு வாரங்கள் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி அதிபர் ட்ரம்பிடம் மக்களுக்கு இலவச நோய் பரிசோதனைகள், தொழிளாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது தொடர்பாக அலோசனை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளர், 4000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.