பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் நாளான நாளையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்திக்கிறார். 24ல் அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்கிறார். அடுத்த நாள் 25ம் தேதி ஐநா கூட்டத்தில் பேசுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் என உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடியும் இந்த பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி இன்று புறப்பட்டு செல்கிறார்.