623 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் முதல் அதிநவீன எலக்ட்ரிக் விமானத்தை தயார் செய்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வசதியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளிட்ட ஆடம்பர கார்கள தயாரிப்புக்கு பெயர்போன பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய விமானத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய எலக்ட்ரிக் விமானத்தை உருவாக்கியுள்ளது.
2017ஆம் ஆண்டில் சீமென்ஸ் ஈ ஏர்கிராஃப்ட் மூலம் இயங்கும் ஏரோபாட்டிக் விமானத்தின் முந்தைய சாதனையான மணிக்கு 213.04 கிமீ பறக்கும் வேகத்தை முறியடித்துள்ளது. இதன்மூலம் தற்போதைக்கு உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனம் இந்த விமானம் தான்.
முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே இந்த விமானம் இயங்கும் என்பதால், பெருமளவு கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் அரசின் எரிசக்தி துறை இதற்கு நிதியுதவி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விமானம் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் மணிக்கு 559.9 கி.மீ. வேகத்தில் சென்றது, 15 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 532.1 கி.மீ. வேகத்தில் சென்றது, 202 நொடிகளில் 3000 மீட்டர் உயரத்தை எட்டியது உள்ளிட்ட 3 சாதனைகளுக்காக சர்வதேச விமான கூட்டமைப்பில் (FAI) விண்ணப்பம் செய்துள்ளது.