உலகம்

ரஷ்யாவில் ஒரேநாளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

 மாஸ்கோ:-

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று ஒரேநாளில் 196 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1036 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமே ரஷ்யா தனது எல்லைகளை மூடியது.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 43 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணிகளை ஆரம்பத்திலேயே ரஷ்யா மேற்கொண்டது. அதேபோல் ரஷ்யா கடும் கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியது.

இந்நிலையில், ரஷ்யாவில் திடீரென நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நேற்று ஒருவர் நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  பிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடரும் தலிபான்கள் கொடுமை – ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது தாலிபான்கள் உத்தரவு

News Editor

ஊரடங்கு நேரத்தில் ஜாலியாக வெளியை செல்ல வழியே சுற்ற வழியை கண்டுபிடித்த இங்கிலாந்து நபர்….

naveen santhakumar

டிக்டாக் செயலியை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த அனுமதி:டொனால்டு டிரம்ப்……

naveen santhakumar