சியோல்:-
தென்கொரியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த கொரிய தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய (Korea Centers for Disease Control and Prevention) இயக்குனர் ஜியோங் யுன் கியோங் (Jeong Eun-kyeong):-
கொரோனா நோயிலிருந்து மீண்டுவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று, ஒரே நாளில் மட்டும் 91 பேருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மற்றவர்கள் மூலமாக தொற்று ஏற்படவில்லை அவர்கள் உடலில் மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது என்றார்.
இவர்கள் தற்பொழுது Korea University Guro Hospital துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 7110 பேர் வரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.