மலாகா:-
ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா (21) கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு லுகிமியா (Leukemia) புற்றுநோய் இருந்ததால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் அவர் மலாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மலாகாவில் உள்ள கால்பந்து கிளப்பான அத்லெடிகோ போர்ட்டாடா அல்டா என்ற கிளப்பின் இளம் வீரர்களுக்கான பயிற்சியாளராக கடந்த நான்கு இருந்து வந்தார். ஸ்பெயினில் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையை 5 ஆக அதிகரித்துள்ளது.
மலாகா பகுதியில் முதல் இளம்வயது மரணம் கார்சியாவினுடையது ஆகும்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவாக இருக்குமென்பதால் கொரோனாவால் உயிரிழக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில் 21 வயது இளம் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான பிரான்சிஸ்கோ கார்சியா மரணமடைந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.