நியூயார்க்:
புத்தாண்டு நாளில் உலகிலேயே, இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப்(UNICEF) தெரிவித்துள்ளது.
புத்தாண்டு நாளான ஜனவரி-1ம் தேதியன்று உலகளவில் குழந்தைகள் பிறப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி-1ல் உலகள் முழுவதும் 3,71,500 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக இந்தியாவில் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும், 2021-ம் ஆண்டின் முதல் குழந்தை பிஜியிலும், அன்றைய தினத்தில் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளது.
இந்தியா (59,995), சீனா (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேஷியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), வங்கதேசம் (9,236), காங்கோ (8,640) ஆகிய 10 நாடுகளில் மட்டும் ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பதிவாகியுள்ளது.