தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள நிலையில் மீண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்களை அரங்கேற்ற துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், வீடு வீடாகச் சென்று அங்குள்ள பெண்களை சமைக்க கட்டாயப்படுத்திகிறார்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் சாதாரண ஆப்கானியர்களிடமிருந்து ரேஷன்களையும் கொள்ளையடிக்கிறார்கள்.
இதனிடையே பெண் ஒருவர் சமைத்த உணவு ருசியாக இல்லை என்று கூறி அவரை தலிபான்கள் எரித்துக் கொன்றதாக முன்னாள் நீதிபதியும் பெண்ணுரிமை ஆர்வலருமான அநாஸ்லா அயூபி திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தங்களை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்களை தாலிபான்கள் கட்டாயப் படுத்துவதாகவும் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
என்னதான் தாலிபான்கள் நாங்கள் முன்பு போல் இல்லை திரும்பி விட்டோம் என்று கூறினாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான தொடர் கொடூரங்களை தலிபான்கள் நிகழ்த்திக் கொண்டுதான் வருகிறார்கள்.