உலகம்

பஞ்சஷீரில் தாலிபான்களில் 600 பேரைக் கொன்றும், 1000 பேரை சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தான் பஞ்சஷீர் மாகாணத்தில் நடந்த மோதலில் தாலிபான்களில் 600 பேரை கொன்றும் ஆயிரம் பேரை உயிருடன் சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி, இருபது வருடங்களுக்கப் பிறகு ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் முற்றிலுமாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள்  கைப்பற்றினர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இருந்தபோதும் வடக்குப் பகுதியில் உள்ள பஞ்சஷீர் மாகாணத்தை தாலிபான்களால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் தாலிபான்களுக்கும் வடக்குப் படைகளுக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்றுவருகிறது.

ALSO READ  போலீசிலிருந்து தப்ப நினைத்து தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய பெண்- CCTV காட்சிகள்...

இந்நிலையில்  தாலிபான்கள் 600பேரை கொன்றுள்ளதாகவும், ஆயிரம் பேரை உயிருடன் சிறை பிடித்து உள்ளதாகவும் வடக்குப் படைகள் அறிவித்துள்ளது. சோவியத் யூனினுகு எதிராக யுத்தம் செய்தவர் அகமது ஷா மசூத். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தாலிபான்களால் கொல்லப்பட்டார். இதன்பிறகு அவரது மகன் அகமத் மசூத் வடக்குப் படைகளின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நியமனம்

Admin

மியான்மரில் பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்கால தடை:

naveen santhakumar

யூடியூப் சேனலில் மதிப்பீடு செய்து ஆண்டுக்கு 185 கோடி சம்பாதிக்கும் சிறுவன்…

Admin