தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பெய்ஜிங்:-
இரண்டு வண்ணங்களில் இரண்டு ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் புகைப்படம் காண்போரை கவரும் வகையில் காட்சியளிக்கிறது.
சீனாவில் கடும் மழை காரணமாக ஏறத்தாள அனைத்து மாகாணங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் மத்திய மாகாணமான ஹூனானில் (Hunan) மலையிலிருந்து (Mountain Current) கீழிறக்கி சேறோடு கலந்து மஞ்சள் நிறத்தில் ஓடும் லியூயாங் ஆறு (Liuyang River) தெளிவாக ஓடும் ஸியாங்ஜியாங் ஆறோடு (Xiangjiang River) கலந்து பெரும் நதிப் பிறவாகமாக மாறும் அழகிய காட்சி வானிலிருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸியாங்ஜியாங் ஆறு குவாக்ஸி மாகாணத்தில் (Guangxi) உற்பத்தியாகிறது. இது மத்திய மாகாணமான ஹூனான் வழியே ஓடி கடலில் கலக்கிறது. ஹூனானில் ஓடும் மிகப்பெரிய ஆறு ஸியாங்ஜியாங் ஆகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.