ஜோகன்னஸ்பர்க்:-
தென்ஆப்பிரிக்காவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 3 கிலோமீட்டர் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்த காட்சி நெஞ்சை நொறுங்கச் செய்கிறது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 5 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பதால் வருமானம் இன்றி பலரும் அன்றாட செலவுக்கே தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செஞ்சுரியன் நகரில் தன்னார்வலர்கள் அளித்த உணவை பெறுவதற்கான 3 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்ததன் ட்ரோன் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் ஜொகனஸ்பர்க் நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செஞ்சூரியன் நகர் அருகே மூய்ப்ளாஸ் (Mooiplaas) மற்றும் ஸ்ரூய்ட் (Spruit) அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஷ்வான் முஸ்லிம் கம்யூனிட்டி (Tshwane Muslim Community), தி சதர்லேண்ட் ரிட்ஜ் (The Sutherland Ridge), ஐகான் பார்க் (Ikon Park), வெஸ்ட்டர்ன் ஹில்ஸ் பிசினஸ் கம்யூனிட்டி (Western Hills Business Community) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்கள்.