நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது.
80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பலுக்கு யாரா பிர்க்லேண்ட் என பெயரிடப்பட்டுள்ளது, இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின் போர்ஸ்கிரன்னில் உள்ள உற்பத்தி ஆலையிலிருந்து 14 கிமீ தொலைவில் பிரெவிக்கில் உள்ள ஏற்றுமதி துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இயக்குவதால் ஆண்டுக்கு 1000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும். இதனால் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறையும்
மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்.
இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என யாரா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்துள்ளார்.
இந்த மின்சார தானியங்கி கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 27. கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.