கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில் ஆண்டுதோறும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்தார்கள் .
புலிகள்தான் காடுகளின் முக்கிய ஆதாரமாக வழங்குகின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக புலிகள் இருந்து கொண்டிருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் காடுகளும் இயற்கை வளங்களும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். எனவே காடுகளில் புலிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகள் காடுகளில் இருந்தால் மட்டுமே அந்த காடுகள் வளமிக்க காடுகளாக இருக்க முடியும் என்பதையும், நீடித்த பொருளாதாரத்தைக் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வது புலிதான் என்பது குறித்த விழிப்புணரவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. தற்போது புலிகள் பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்காக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டம் உள்ளிட்ட அனைத்துப் வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து உள்ளதால் வனப் பகுதிகள் மீண்டும் வளமிக்க பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.