டோக்கியோ
2020 ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. அனைவரின் நெஞ்சை நெகிழவைத்த தருணங்களுக்குப் நிறைய இருந்தது . இறுதி நாளான இன்று பெண்கள் வாலிபால், ஆண்கள் வாட்டர் போலோ, ஆண்கள் மராத்தான், மற்றும் குத்துச்சண்டைக்கான இறுதிப் போட்டிகளுடன் 2020 ஒலிம்பிக் போட்டி அட்டகாசமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
அமெரிக்கா 39 தங்கம் 41 வெள்ளி, 33 வெண்கல பதக்கங்களுடன் 113 மெடல்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா 38 தங்கம் 32 வெள்ளி 18 வெண்கல பதக்கங்களுடன் 88 மெடல்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஜப்பான் 27தங்கம் 14 வெள்ளி 17 வெண்கல பதக்கங்களுடன் 58 மெடல்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 1 தங்கம் 2 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களுடன் 7 மெடல்கள் பெற்று 33 வது இடத்தை பிடித்து சாதனை
படைத்துள்ளது.
அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.