செய்தித்தாள்கள் மூலம் கொரோனா குறித்த தகவல்கள் பரவும். ஆனால் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா??
பணத்தின் மூலம் அல்லது செய்தித்தாள்கள் மூலம் வைரஸ் பரவுகிறது என்று வதந்திகள் உலா வருகின்றன உண்மையில் செய்தித்தாள்கள் மூலம் பரவுமா என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்.
செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் கடந்த வாரமே தெரிவித்துவிட்டனர்
இது குறித்து வேலூர் CMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான் தி பிரிண்ட் (The Print) இதழுக்கு அளித்த பேட்டியில்:-
இன்றைய சூழ்நிலையில் செய்தித் தாள்கள் வழியாக கொரோனா வைரஸ் பரவுவதற்குச் சாத்தியமுள்ளது என ஒத்துக் கொள்கிறேன்.
செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்து, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தால் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இதற்கான சாத்தியம் மிகக் குறைவு. நான் இப்போதும் அன்றாடம் செய்தித்தாள்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஒருவேளை நீங்கள் படித்த செய்தித்தாள் வழியாக அல்லது பணத்தின் மூலம் வைரஸ் பரவும் என்ற சந்தேகம் இருந்தால், செய்தித்தாள் படித்த பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவினால் போதும். வைரஸைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.