தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறுசிறு தீவுகளில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஹைதி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்போது அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கும் வானாட்டு தீவில் இருந்து வடமேற்கு பகுதியில் 12 மைல் தூரத்திலும், 56 மைல் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 185 மைல்களுக்குள் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.