நியூயார்க்:
பயங்கரவாதம் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன
தற்கொலைப்படை தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 150க்கும் மேற்பட்டோர் உயிர்இழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், 15 உறுப்பு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது.
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலங்களில் கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மசூதியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தொடர்ந்து எதிர்க்கும். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் என்பது மிகப்பெரிய குற்றமாகும். பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், 15 உறுப்பு நாடுகளும் இணைந்து இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்த இந்தியாவின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்த்தக்கது.