இஸ்லாமாபாத்:-
கொரோனா வைரஸ் தூங்குவதாகவும் மேலும், நாம் தூங்கும் போது அவை எந்தத் தீங்கும் செய்யாது என்று மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்று பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா முழுவதும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சீனாவில் கூட மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு சர்ச்சையான, கிண்டலான, முட்டாள் தனமான கருத்துக்களை பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள். அதுபோல பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் கொரோனா வைரஸ் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கொரோனா வைரஸ் தூங்குவதாகவும், நாம் தூங்கும்போது அந்த வைரஸ் எந்தத் தீங்கும் செய்யாது என்று மருத்துவர்கள் சொன்னதாகவும் முடிந்தவரை தூங்குமாறு பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதி ஃபஸ்ல்-உர்-ரஹ்மான் கூறியுள்ளார்.
மேலும் நீங்கள் அதிகமாக தூங்கினால் வைரஸும் அதிகமாக தூங்கும். அதனால் உங்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதேபோல நீங்கள் இறந்தால் வைரஸும் உங்களுடன் சேர்ந்து இறந்துவிடும் என்றும் ரஹ்மான் கூறியுள்ளார்.
இவர் இவ்வாறு கூறிய வீடியோவை நைலா இனாயத் என்ற பாகிஸ்தான் ஊடகவியலாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:-
மேலும் அதில் “நாம் தூங்கும்போது அது தூங்குகிறது, நாம் இறக்கும்போது அது இறந்துவிடும்” சிம்பிள் என்ற கேப்ஷனை இட்டுள்ளார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஹ்மான் பாகிஸ்தான் தேசிய சட்டப்பேரவையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.