ஓஹியோ:-
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெஸிக்கா பூமர்ஷைன் (Jessica Boomershine (42)).
இவர் கடந்த மாதம் மியாமிஸ்பர்க்-ல் உள்ள 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மான்ட்கோமரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலைகள் ஜெஸிக்கா பூமர்ஷைன் போலீசில் இருந்து தப்புவதற்காக சுவரின் மேலே இருந்த துளை வழியே தப்பி செல்ல முயற்சிக்கும் பொழுது மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
ஜெஸிக்கா விசாரணைக்காக அங்கிருந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அங்கு கைதிகள் காத்திருக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த நாற்காலி வழியே மேலே ஏறி உடைத்து சுவற்றின் மேலே இருந்த ஒரு பெரிய துளை வழியாக வெளியே தப்பிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அங்கிருந்த சீலிங்கை உடைத்துக்கொண்டு கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை சக கைதிகளும் போலீசாரும் கவனித்து விட்டனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்த ஜெஸிக்காவை உடனடியாக போலீசார் கீழே பிடித்து இழுத்து கைது செய்தனர்.
அவர்களை பிடித்து இழுக்கும்போது சீலிங்கை உடைத்துக் கொண்டு கீழே உள்ள குப்பை தொட்டியில் விழுந்தார் ஜெஸிக்கா.
ஏற்கனவே மியாமிஸ்பர்க் அருகிலுள்ள முதியவர் ஒருவரின் வீட்டை தாக்கியது இப்போது போலீசாரிடம் தப்ப முயன்றது என்று இரு வழக்குகள் ஜெஸிக்கா மீது பதியப்பட்டுள்ளது.