ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலகெங்கிலும் உள்ள விலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது.
முதன்முதலில், இந்த காண்டாமிருக தினம் WWF- தென்னாப்பிரிக்க பிரிவால் அறிமுகப்படுத்தப்பட்டது. காண்டாமிருகத்தின் அனைத்து இனங்களையும் பாதுகாக்க அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம்.
இந்நாளில் கருப்பு, வெள்ளை, ஒற்றை கொம்பு, ஜாவா மாற்றம் சுமத்ரன் ஆகிய 5 வகை காண்டாமிருகங்களும் கொண்டாடப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 இன் அறிக்கையின்படி, இந்தியாவின் காட்டுப் பகுதிகளில் சுமார் 3000 காண்டாமிருக இனங்கள் மட்டுமே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, அவற்றில் 2000 காண்டாமிருகங்கள் இந்தியாவின் அசாம் மாநிலத்தின் காடுகளில் காணப்படுகின்றன.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) கீழ் ஆபத்தில் உள்ள பிரிவில் ஜவான் காண்டாமிருகம், சுமத்ரன் காண்டாமிருகம் மற்றும் கருப்பு காண்டாமிருகம் ஆகியவை உலகமுழுவதும் வாழ்கின்றன.
வெள்ளை காண்டாமிருகம் ஒரு சில இனங்கள் மட்டுமே இருப்பதாகவும், குறிப்பாக வெள்ளை காண்டாமிருகம் ஆபத்தான நிலையை நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இனம் விரைவில் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு கொம்பு கொண்ட காண்டாமிருகமும் விரைவில் அழிந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.