சிங்கப்பூர்
சிங்கப்பூரில் உள்ள மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட் பேண்டேஜை உருவாக்கி,உள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் நாள்பட்ட காயங்களை மொபைல் சாதனத்தில் ஒரு செயலி மூலம் வெகு தொலைவிலிருந்து கண்காணிக்க முடியும். ஸ்மார்ட் பேண்டேஜை பயன்படுத்திடுவதின் மூலம் நோயாளிகள் மருத்துவரைநேரடியாக சந்திப்பதை தவிர்க்க முடியும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சிக் குழு, வெப்பநிலை, பாக்டீரியா வகை மற்றும் pH மற்றும் அழற்சியின் அளவுகள் போன்ற தகவல்களைப் பயன்படுத்தி, குணப்படுத்துவதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, ஒரு வெளிப்படையான பேண்டேஜுடன் இணைக்கப்பட்ட அணியக்கூடிய சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளது.
நீண்ட நாட்களாக ஒருவருக்கு காயம் அல்லது புண் இருந்தால் காட்சி ஆய்வு மூலம் அதை பரிசோதிப்பதற்கான ஒரே வழி ஸ்மார்ட் பேண்டேஜ் என்று பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர் Chwee Teck Lim கூறினார்.
பரிசோதனை செய்யும் மருத்துவர் மேலும் தகவலைப் பெற விரும்பினால் காயத்தின் திரவத்தைப் பெற்று, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்புவார்கள் என்று அவர் கூறினார்.
“VeCare” தொழில்நுட்பம் என்பது நோயாளிகளை வீட்டிலேயே குணமடையச் செய்வது தான். தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரை நேரில் சந்திக்கும் வேண்டிவரும்.
நீரிழிவு ஏற்பட்ட கால் புண்கள் போன்ற பிற காயங்களுக்கு ஸ்மார்ட் பேண்டேஜ் பயன்படுத்தி விரைவில் குணமடையலாம் என்று Chwee Teck Lim தெரிவித்தார்.