தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆண் புலி ஒன்று தனது துணையைத் தேடி சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் நடந்து தியான்கங்கா வனபகுதிக்கு சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரியான பர்வீன் காஸ்வான் (IFoS) என்பவர் தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அவற்றின் உடலில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது.
இதனை அதிகாரிகள் கண்காணித்து வந்ததில் ஒரு புலி மட்டும் மலைகள், காடுகள், ஆறு, வயல்களை கடந்து தன் இணையைத் தேடி அலைந்து திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரையும் தாக்கவில்லை.
புலி சென்ற வழித்தடத்தின் வரைபடத்தையும் அந்த வனத்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
பகலில் ஓய்வெடுக்கும் அந்த புலி. இரவில் நடந்து செல்வதாகவும், இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அந்த வனத்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.