உலகம்

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு வயது 18 மற்றும் 36 ஆகும். மேலும் 31 வயதான நபருக்கு பலத்த காயமும், நான்கு பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. இந்நிலையில் திடீர் துப்பாக்கி சூடு காரணமாக சிறுமி ஒருவர் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினார். மேலும் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி காயமடைந்தனர்.


Share
ALSO READ  வேலைக்கு போக, இல்ல வீட்ட விட்டு போ ; திட்டிய தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொலைபேசியை விழுங்கிய நபர்… ‘ஸ்கேன்’ ரிப்போர்ட் பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்…!

News Editor

ஒரே ட்வீட்டில்  பிட்காயின்களின் விலை அதிகரித்த எலான் மஸ்க் !

News Editor

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ…

naveen santhakumar