அய்ஸ்வால்:-
மிஸோரத்தை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் சீனாவின் மக்காவ் (Macau) நகருத்து சென்றுவந்ததை மறைத்ததை போலீசார் கண்டுபிடித்து, உண்மையை மறைத்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை IG ஜான் நேய்ஹ்லைய (John Neihlaia) கூறியதாவது:-
இந்தப் பெண்மணி கடந்த மார்ச் 10ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து லெங்பூய் (Lengpui) விமானநிலையத்திற்கு வந்து இறங்கி உள்ளார். அப்போது தான் கொல்கத்தாவிலிருந்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது முகநூல் பக்கம் அவர் சீனாவின் மக்கா நகருக்குச் சென்று வந்ததை காட்டிக் கொடுத்துவிட்டது சீனாவின் மக்களை நகரிலிருந்து கொல்கத்தா வந்து பின் கொல்கத்தாவிலிருந்து மிசோரம் வந்துள்ளார் தனது பயண விவரங்களை மறைத்து குற்றத்திற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கொடிய கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிற்க்கு பெண் ஒருவர் சென்று வந்ததை மறைத்தது மிஸோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.