உலகம்

ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிறிஸ்துமஸ் மாதம் வந்தாலே லண்டன் மக்களுக்குக் கொண்டாட்டம். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவிற்காக தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்காக சுமார் 620 பரிசுப் பொருள்களை வாங்கியுள்ளார் ராணி எலிசபெத் . மேலும், அவர் தனிப்பட்ட முறையில் தன் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டைகளும் இதில் அடங்கும். மேலும், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் நாளன்று அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ள பிரத்யேக அறையில் தங்களின் பரிசு மற்றும் வாழ்த்து அட்டைகளை ராணியிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

ALSO READ  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகளுக்கு நெருப்பு வைத்த தந்தை…

பரிசுப் பொருளைக் கொடுப்பதோடு, வருடம் முழுவதும் நீங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் எனக்கூறி ஒவ்வொருவரையும் வாழ்த்துவாராம் ராணி. ஐந்தாம் ஜார்ஜால் இந்த வழக்கம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசுப் பொருள்கள் புத்தக டோக்கனாகவோ அல்லது சிறிய நினைவுப் பரிசுகளாகவோ இருக்கும். இதற்காக லண்டனிலுள்ள முன்னணி டிபார்ட்மென்டல் ஸ்டோர் உரிமையாளர்கள் தங்களின் சிறந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கலவர பூமியான சிறை…. அதிபரின் அதிரடி முடிவு….

naveen santhakumar

அடக்கொடுமையே இதுக்கெல்லாமா கூகிள்-அ வசதி இருக்கு:

naveen santhakumar

அமெரிக்காவிற்குள் ஐரோப்பியர்கள் வர ட்ரம்ப் தடை விதிப்பு…..

naveen santhakumar