நடிகர் விஜயின் தீவிர ரசிகர் பாலா என்பவர் நேற்று ஆகஸ்ட் 13 மாலை 6 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார் இவருக்கு இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக #RIP BALA என்று ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
அவரது தற்கொலைக்கு நண்பர்கள் மற்றும் பல பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலாவின் தற்கொலை குறித்து நடிகர் விஜய் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து தனது இரங்கலை தெரிவித்தார்.
பாலாவின் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அவர் ஒரு பதிவினை ட்வீட் செய்தார் அதில் தனக்கு காதல் பிரச்சினையில் எதுவும் இல்லை என்றும் குடும்பத்தில் தான் பிரச்சனை என்றும் பதிவிட்டிருந்தார்.
மேலும் நேற்று மாலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன் “தலைவன் படம் பார்க்காமலேயே போகிறேன் லவ் யூ தலைவா” என்று ட்வீட் செய்திருந்தார். இது இந்தப் பதிவு அனைவரின் இதயத்தையும் ஒரு நொடி கனக்கச் செய்தது.
மேலும் நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம் “எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க கற்றுக்கொள்ளுங்கள் தற்கொலை ஒன்றே அதற்கும் தீர்வு இல்லை” என்று கூறியுள்ளார்.