நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூரரைப் போற்று’. ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதனையடுத்து இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘சூர்யா 40’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் பலர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அண்மையில் படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதால் விரைவில் படப்பிடிப்பில் கலந்தது கொள்வர் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சூர்யா 40 படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடிப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆதவன் படத்திற்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் நடிகர் சூர்யா படத்தில் வடிவேல் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.