பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.
எல்கார் பரிஷாத் வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவருக்கு ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டான் ஸ்வாமி பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார்.
2017-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வழக்கு தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஸ்டான் ஸ்வாமியை என்ஐஏ அதிகாரிகள்கைது செய்தனர்.
பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்று என்ஐஏ அவர் மீது குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.