கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை தங்கள் உயிரை பணயம் வைத்து 6 பேர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சின்டியன் நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இரண்டு சிறுமிகள் சிக்கி கொண்டனர். உடனடியாக ஆறு இளைஞர்கள் மாடியில் தொங்கியபடியே வெறும் கைகளால் மனித சங்கிலி போல ஒருவரை ஒருவர் பிடித்தபடி தீயில் சிக்கிய இரண்டு சிறுமிகளையும் காப்பாற்றினார்
இந்த சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இரண்டு தீயணைப்புத் துறை அதிகாரிகள் அந்த 6 பேரையும் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.
துரிதமாக செயல்பட்டு தீயில் சிக்கித்தவித்த சிறுமிகளை காப்பாற்றிய அந்த 6 பேரின் வீரதீரச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.