தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி சரக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் விடுமுறை தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி ஜனவரி 15, 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 18ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், ஜனவரி 26 குடியரசுத்தினம் ஆகியவை காரணமாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.