கவிஞர் காமகோடியன் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், கவிஞர் காமகோடியான் அவர்கள் நேற்றிரவு உடல்நலமின்றி காலமானார் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை எனக்கு என்ற “வரப்பிரசாதம்” திரைப்படத்தில் வேலைசெய்யும் போதே, தயாரிப்பு மேலாளராக பணியாற்றியதின் மூலம் நன்றாகவே தெரியும். அப்பொழுதே தனக்கு தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் ஆர்வம் இருப்பதாக கூறியிருந்தார். அவர் நம்முடைய M.S.V அண்ணாவுடன் மிக நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்.
மேடை கச்சேரிகளில் தனிப்பாடலை கவிஞர் M.S.V காமகோடியான் அண்ணாவும் நிழலாடுகிறது. என்னுடைய எழுதிய “மனிதனாயிரு” பாடியது இன்னும் என் என்ற் நெஞ்சில் இசையமைப்பிலும் பல பாடல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். அன்னார் மறைவு நம் தமிழ்திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் கவிஞரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கவிஞரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். எனக்குறிப்பிட்டுள்ளார்.