ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக வரும் 30ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் சூதாட்டம், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறியுள்ளதனால் அதனை தடுக்கும் விதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 30ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில், புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வருவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.