தனக்கு கருக்கலைப்பு செய்து விட்டதாக விமான நிலையத்தில் பெண் ஒருவர் நாடகமாடிய சம்பவம் கென்யாவில் நிகழ்ந்துள்ளது.
கென்யாவின் மொம்பாஷா பகுதியில் முகமது அப்துல்லா மான் – சைதா பராகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சைதா பராகா கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
பின் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர் தன் கணவருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் வீட்டிலிருந்து வெளியேறிய தான் விமான நிலையம் சென்றதாகவும் அங்கு மூன்று பெண்கள் தன்னை கடத்தி தனது கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார்.
ஆனால் தான் அவர்களிடம் இருந்து தப்பி வந்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மருத்துவ பரிசோதனை செய்த போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
உண்மையில் சைதா கர்ப்பமாக இல்லை என்றும், அவர் கூறியது அனைத்தும் பொய் என்றும் தெரியவந்தது.
அதன்பின் கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.