தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் உதவி என்று யார் கேட்டாலும் மறுக்காமல் செய்யும் சேவை குணம் கொண்டவர். அதனால் மக்கள் இதுவரை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறார்கள் இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று நடிகர் சோனு சூட்டிற்கு கோவில் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்ற முதியோர்களை நகராட்சி ஊழியர்கள் ஒரு வேனில் ஏற்றி அவர்களை இந்தூர் புறநகர் சாலையில் காட்டுத்தனமாக இறக்கிவிடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதைப்பார்த்த பலர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் சென்று வலியுறுத்தி வருகின்றனர். அதனையடுத்து நடிகர் சோனு சூட் அந்த ஆதரவற்ற முதியவர்களுக்கு வீடு வழங்குவதாக தகவல் வெளியாகியது. அதனை தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார் சோனு சூட்.