சினிமா

தெலுங்கு நடிகர் ராஜசேகரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அவரது மனைவி ஜீவிதா, மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோர் கொரோனாவிலிருந்த் மீண்டுள்ள நிலையில் ராஜசேகர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்  உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து அவரது மகள் ஷிவாத்மிகா, தனது கொரோனாவுடன் தீவிரமாக போராடி வருகிறார். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்த அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ராஜசேகர் கொரோனா தொற்று காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பும் அளிக்கிறது. தொடர்ந்து அவர் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜசேகர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்


Share
ALSO READ  'தனுஷ் 43' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பிரபல பாடலாசிரியர்...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினி,விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை

Admin

நம்பிக்கை துரோகம் செய்தது யாரு சில தினங்களில் வெளிவரும் : விஷ்ணு விஷால் 

News Editor

friendship படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் ஹர்பஜன்

Admin